“வாக்கிங்” போவதால் நன்மை தானா?

Sunday, 23 August 2009

உடற்பயிற்சி என்றாலே பெரும்பாலானவர்கள் சொல்லும் அறிவுரை “நடப்பது” தான். தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு குறையத் துவங்கும் என்றெல்லாம் மக்கள் பயன்களை அடுக்குவதுண்டு.

அறிவுரையைக் கேட்பவர்கள் கேட்க மறந்து போகும் விஷயங்களில் சில எப்படி நடக்கவேண்டும், எத்தனை வேகமாக நடக்க வேண்டும் போன்றவை.

உலகெங்கும் பலருக்கும் இருக்கக் கூடிய இந்தக் குழப்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் இப்போது ஒரு ஆராய்ச்சி மூலம் தீர்த்து வைத்திருக்கிறார்கள்.

அதாவது நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பதே அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் அவர்கள்.

எதிர்பார்க்கும் பயன் கிடைக்க வேண்டுமெனில் ஆண்களின் நடை வேக விகிதம் நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும் எனவும் , பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும் எனவும் அவர்களுடைய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.



97 பேரை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சி இறுதி முடிவாக, ஆண்களோ, பெண்களோ நிமிடத்துக்கு சுமார் நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பது நல்லது எனும் முடிவை எட்டியிருக்கிறது.

இந்த ஆராய்ச்சி ஆரோக்கியமான மக்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியம் குறைவானவர்களோ, மிக அதிக எடை கொண்டவர்களோ அதற்கு ஏற்றார்போல் நடையின் வேகத்தை மிதப்படுத்தலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி தொடர்பான பேராசிரியர் கேரி டோனோவன்.


தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது. அதுவும் நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.

எனவே, அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.

கவனம் தேவை, நிமிடத்துக்கு நூறு அடிகள் !

கிரிக்கெட் சரவேடித் திருவிழா.

2007 மார்ச் மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடக்க இருப்பது 9வது உலகக் கோப்பை போட்டிகளாகும்.இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன(விரிவான தகவல்கள் விரைவில்) . இதற்கு முன் நடைபெற்ற எட்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மூன்று முறையும் (1987,1999,2003),மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு முறையும்(1975,1979),இந்தியா ஒரு முறையும்(1983),பாகிஸ்தான் ஒரு முறையும் (1992),இலங்கை ஒரு முறையும் (1996) வென்றுள்ளன.
இதுவரை எந்த ஒரு நாடும், தனது மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை. (1996ல் இலங்கை வென்ற பொழுதும்,அம்முறை இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடத்தின). உலகக் கோப்பை போட்டிகளில் மிக அதிக முறை பங்கேற்றவர் பாகிஸ்தானைச் சேர்ந்த வாசிம் அக்ரம்.இவர் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை 38 (5 உலகக் கோப்பைகள்). இரண்டாவதாக வருபவர் இலங்கையைச் சேர்ந்த அரவிந்த டி சில்வா (35 போட்டிகள்,5 உலகக் கோப்பைகள்), மூன்றாவது இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத்(34 போட்டிகள், 4 உலகக் கோப்பைகள்). சச்சின் டெண்டுல்கர் இதுவரை 4 உலகக் கோப்பைகளிலும்,33 போட்டிகளிலும் விளையாடி,மியாண்டட்டுடனும் ஸ்டிவ் வாஹ்வுடனும் நாலாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார். 10வது உலகக் கோப்பை போட்டிகள் 2012ல் இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை ஆகிய நாடுகளில் நடக்கவுள்ளன. இதன் இரண்டு அரை இறுதி ஆட்டங்கள் முறையே கொழும்பு மற்றும் கராச்சியிலும், இறுதியாட்டம் மும்பையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விவியன் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பான்டிங், அரவிந்த டி சில்வா மூவரும் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் சதம் அடித்துள்ளனர். மூன்று முறையும் அவர்களது அணிகள் கோப்பையை வென்றன்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த பெருமைக்குரியவர் சச்சின் டெண்டுல்கர்(தல போல வருமா?). இவர் இதுவரை 33 போட்டிகளில் பங்கேற்று 1732 ரன்கள் குவித்துள்ளார்(சராசரி 59.72!). இதில் 4 சதமும், 12 அரை சதங்களும் அடங்கும். இவரின் அதிகபட்ச ரன் 152. இவருக்கு அடுத்து வருபவர் ஜாவெத் மியாண்டட்(33 போட்டிகள் 1083 ரன்கள் 1 சதம் 8 அரை சதம் அதிகபட்ச ரன் 103)


அதிக விக்கெட்டுகள் எடுத்த பெருமைக்குரியவர் வாசிம் அக்ரம். இவர் 38 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த பந்து வீச்சு 5-28,சராசரி 23.80 எகானமி ரேட் 4.04. இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் 33 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நகைச்சுவை

முதலாளியின் பெருந்தன்மை!!

“எல்லோரும் இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நான் தலா 5000 ரூபாய்க்கு காசோலை தர்றேன்.”

“ரொம்ப நன்றி சார்.”

“இட்ஸ்.. ஓகே. இதே போல அடுத்த வருஷமும் வேலை செஞ்சா இந்த காசோலையில நான் கையெழுத்துப் போட்டுத் தர்றேன்!!”


கம்ப்யூட்டர் கடவுள்

“முதன்முதல்ல மல்டி டாஸ்கிங்க் (Multi-tasking) கண்டுபிடிச்சது யாரு?”
“கடவுள்தான்.. “
“எப்படிச் சொல்றே?”
“அவர் கிட்ட தான் நிறைய கைகள் இருக்கே!”


மீண்டும் வடிவேலு, பார்த்திபன்..

“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”

“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”

“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”

“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”

“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”

“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு."



மோட்சம் நிச்சயம்!

“நர்ஸ்.. ஆபரேஷன் முடிஞ்சி நான் கண் முழிச்ச உடனே என் மனைவியைப் பாக்கணும்.”

“கவலைப்படாதீங்க.. கடவுளையே நீங்க பாப்பீங்க!”


விஜய் டிவியில் "மாயாஜாலம்"

Saturday, 22 August 2009


Image












விஜய் டிவியில் ஞாயிறு தோறும் மாயலோகம் என்னும்
மாயாஜாலத் தொடர் காலை 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பிரபல மேஜிக் நிபுணரும் மேஜிக்கில் கின்னஸ் சாதனையாளருமான
டாக்டர் அலெக்சாண்டர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
பிரமிக்கவைக்கும் மாஜிக் வித்தைகளில்அசாத்திய சாதனை புரிந்த
இந்தியாவின் பல்வேறு தலைசிறந்த மேஜிக் கலைஞர்களை
விஜய் டி.வி.யின் மாயலோகம் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தி வருகிறது.
மேஜிக்கில் மாயாலாஜங்கள்இந்நிகழ்ச்சியில் தான் முதன் முதலில்
அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் தலை சிறந்த
மேஜிக் கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த
விஜய் டிவி மேடை அமைத்து கொடுத்துள்ளது. அலெக்சாண்டர் கடந்த
15 ஆண்டுகளாக இந்த மேஜிக் கலையில் ஈடுபட்டு பல விருதுகள் பெற்றுள்ளார்.
2005-ம் ஆண்டில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக மாஜிக் செய்ததில்
இவர் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் 12 மணி நேரம் தொடர்ந்து மென்ட்டல் மேஜிக் செய்தற்காகவும்
இவரது பெயர் லிம்காவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மென்ட்டல்
மாஜிக் என்பது, ஒருவரின் மனதில் நினைத்திருப்பதை சரியாக யூகித்துச்
சொல்வதாகும். அலெக்ஸ்சாண்டருக்கு சிறந்த தந்திரக் காட்சி கலைஞருக்கான
`கலைமாமணி' விருதும் வழங்கப்பட்டது.இவர் தமிழ் திரைப்படங்களிலும்
தனது முத்திரையை பதித்துள்ளார். இந்தியாவைத் தவிர பல்வேறு நாடுகளிலும் தனது
மேஜிக் திறமையை நிரூபித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட மாஜிக் ஷோக்களை
இதுவரை இவர் செய்துள்ளார்.மாயலோகம் நிகழ்ச்சியில், மேடையில்
குதிரை, யானை, கார், பைக் ஆகியவை மறைந்து மீண்டும் தோன்றும்
மாயாஜாலம் செய்யவிருக்கிறார். மேலும் ஒரு பெண்ணின் உடலை
இரண்டாகப் பிளந்து மீண்டும் அதனை ஒன்றாக்கும் மாயாஜாலமும் இதில்
இடம் பெறுகிறது. இதைப் போன்ற மேஜிக் காட்சிகள்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது இதுவே முதல் முறை ஆகும்.

அரசியலில் ஆழம் பார்க்கிறேன்: விஜய்



புதுக்கோட்டை மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை அய்யனார் திடலில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

’’ஏன் இந்த இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றக்கூடாது என்று கேட்டனர். நான் பிளஸ்-2 படித்து முடிக்கும் போது நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை என் தந்தையிடம் கூறினேன். அதற்காக பெரிய போராட்டமே நடந்தது.


அதற்கு என் தந்தை என்னிடம் நீ நடிகன் ஆக வேண்டுமானால் அதற்கு உன்னை நீ தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதற்காக நான் 6 மாதம் கடினமாக உழைத்தேன். நாளை தீர்ப்பு என்ற படத்தில் முதலில் நடித்தேன்.

எனது அப்பா லேசான கோடு கிழித்து ஒத்தையடி பாதை காட்டினார். நான் அதை தார் ரோடாக மாற்றினேன். பின்பு அதனை ஹைவே ரோடாக மாற்றினேன். மீண்டும் உழைத்து அதை 6 வழி சாலையாக மாற்றி உழைத்து வருகிறேன்.

எனது பாதை கடினமானது. பல சறுக்கல்கள், கிண்டல்கள் இருந்தன. இதையும் தாண்டி உங்கள் முன் வந்துள்ளேன். நான் எதில் காலை வைத்தாலும் அதில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும், வேகமும் இருக்கும்.

அரசியல் என்பது சினிமா கதை போன்றது அல்ல. சினிமா என்பது ஒரு சிறிய வட்டம். ஆனால் அரசியல் என்பது ஒரு பெரிய கடல். அந்த கடலில் விழுவதற்கு முதலில் ஆழத்தை பார்க்க வேண்டும்.

நான் தற்போது பல தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன். இந்த இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், ஒரு லட்சம் உறுப்பினர்களையும், நகர, வட்டங்கள் சார்பில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும், கிளை மன்றங்களின் சார்பில் 5 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.

இந்த இயக்கம் எப்படி வரும். எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும். அப்போது என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன். அது உங்கள் கையில் தான்