மூல நோய குணமாக
வேப்ப மர வித்துக்களை உடைத்து உள்ளே உள்ள பருப்புக்களை மட்டும் எடுத்து,சுத்தமாய் அம்மியில் வைத்து,பசுப்பால் விட்டு மை போல அரைத்து இரண்டு மொச்சைக் கொட்டையளவு எடுத்து வில் போட்டு விழுங்கி விட வேண்டும்.இந்த விதமாக தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீண்ட காலமாக இருக்கும் மூலம் கரைந்து மூல நோய அடியோடு குணமாகும்.இந்த மருந்தை சாப்பிடும் போது அதிக காரம் சாப்பிடக்கூடாது.காரம் தேவையானால் மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.மோர்,தயிர்,பால் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பாகற்காய் சேர்க்கக் கூடாது.ஏழு நாட்களில் சுகம் தெரியும்.
இருதயப் படபடப்பு குணமாக
ஒரு சிலருக்கு இருதயம் பலவீனமாக இருப்பதன் காரணமாக அடிக்கடி இருதயப் படபடப்பு உண்டாகும்.இந்த சமயம் இருதயம் வேகமாகத் துடிக்கும்.இனம் தெரியாத ஒரு பயம் தோன்றும்.எதிலும் மனம் சொல்லாது.சில நிமிடங்களில் இந்த நிலை மாறிவிடும்.
சகய நிலை ஏற்ப்படும்.இதை உடனடியாகக் கவனித்து குணப்படித்திக் கொள்ள வேண்டும்.இதற்க்கு வெண் தாமரைப் பூ நல்ல குணம் கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது.வெண் தாமரைப் பூவைக் கொண்டு வந்து,அதன் வெண்ணிறமான இதழ்களை ஆய்ந்து எடுத்து அவைகளை பொடியாக நறுக்கி,ஒரு சுத்தமான சட்டியில் போடவும்.
அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காச்சி இறக்கி,இதழ்களைப் பிழிந்து சாறு எடுத்து வடி கட்டி வைத்துக் கொண்டு,வல்லாரை இலையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்த உரலில் போட்டு இடித்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து மூன்று தேக்கரண்டியளவு சாற்றை இதில் விட்டுக் கலக்கி கொடுத்து விட வேண்டும்.இந்த மருந்தை தொடர்ந்து பன்னிரண்டு நாள்கள் வரை காலை மாலையாகக் கொடுத்து வந்தால் இருதயப் படபடப்பு பூரணமாகக் குணமாகும்.
வைத்தியம் தொடரும்.(உங்கள் கருத்துக்களை என் vignaraj@live.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Box Office Report -Aug 17th
14 hours ago
Comments
No response to “சில இலவச வைத்தியம்.”
Post Comments (Atom)
Post a Comment |
Post a Comment