சச்சின் பற்றிய சிறு பார்வை.

Tuesday 25 August 2009

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar, பிறப்பு - ஏப்ரல் 24, 1973) தலைசிறந்தஇந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.




சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாகடெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990ல் இங்கிலாந்துஅணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 12,000 ரன்களுக்கு மேல் குவித்த வீரராவார்.


துடுப்பாட்ட வகைவலதுகை
பந்துவீச்சு வகைவலதுகைகை கால் சுழற்பந்து
வலதுகைகை ஓவ் சுழற்பந்து
வலதுகைகை கால் மந்தகதி
தேர்வுஒ.ப.து
ஆட்டங்கள்146413
ஓட்டங்கள்11,78216,088
ஓட்ட சராசரி55.5743.95
100கள்/50கள்39/4941/87
அதிக ஓட்டங்கள்248*186*
பந்துவீச்சுகள்3,3307,709
இலக்குகள்42154
பந்துவீச்சு சராசரி52.6643.79
சுற்றில்
5 இலக்குகள்
02
ஆட்டத்தில்
10 இலக்குகள்
0பொருந்தாது
சிறந்த பந்துவீச்சு3/105/32
பிடிகள்/
ஸ்டம்பிங்குகள்
85/0120/0


“வாக்கிங்” போவதால் நன்மை தானா?

Sunday 23 August 2009

உடற்பயிற்சி என்றாலே பெரும்பாலானவர்கள் சொல்லும் அறிவுரை “நடப்பது” தான். தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு குறையத் துவங்கும் என்றெல்லாம் மக்கள் பயன்களை அடுக்குவதுண்டு.

அறிவுரையைக் கேட்பவர்கள் கேட்க மறந்து போகும் விஷயங்களில் சில எப்படி நடக்கவேண்டும், எத்தனை வேகமாக நடக்க வேண்டும் போன்றவை.

உலகெங்கும் பலருக்கும் இருக்கக் கூடிய இந்தக் குழப்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் இப்போது ஒரு ஆராய்ச்சி மூலம் தீர்த்து வைத்திருக்கிறார்கள்.

அதாவது நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பதே அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் அவர்கள்.

எதிர்பார்க்கும் பயன் கிடைக்க வேண்டுமெனில் ஆண்களின் நடை வேக விகிதம் நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும் எனவும் , பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும் எனவும் அவர்களுடைய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.



97 பேரை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சி இறுதி முடிவாக, ஆண்களோ, பெண்களோ நிமிடத்துக்கு சுமார் நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பது நல்லது எனும் முடிவை எட்டியிருக்கிறது.

இந்த ஆராய்ச்சி ஆரோக்கியமான மக்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியம் குறைவானவர்களோ, மிக அதிக எடை கொண்டவர்களோ அதற்கு ஏற்றார்போல் நடையின் வேகத்தை மிதப்படுத்தலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி தொடர்பான பேராசிரியர் கேரி டோனோவன்.


தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது. அதுவும் நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.

எனவே, அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.

கவனம் தேவை, நிமிடத்துக்கு நூறு அடிகள் !

கிரிக்கெட் சரவேடித் திருவிழா.

2007 மார்ச் மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடக்க இருப்பது 9வது உலகக் கோப்பை போட்டிகளாகும்.இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன(விரிவான தகவல்கள் விரைவில்) . இதற்கு முன் நடைபெற்ற எட்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மூன்று முறையும் (1987,1999,2003),மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு முறையும்(1975,1979),இந்தியா ஒரு முறையும்(1983),பாகிஸ்தான் ஒரு முறையும் (1992),இலங்கை ஒரு முறையும் (1996) வென்றுள்ளன.
இதுவரை எந்த ஒரு நாடும், தனது மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை. (1996ல் இலங்கை வென்ற பொழுதும்,அம்முறை இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடத்தின). உலகக் கோப்பை போட்டிகளில் மிக அதிக முறை பங்கேற்றவர் பாகிஸ்தானைச் சேர்ந்த வாசிம் அக்ரம்.இவர் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை 38 (5 உலகக் கோப்பைகள்). இரண்டாவதாக வருபவர் இலங்கையைச் சேர்ந்த அரவிந்த டி சில்வா (35 போட்டிகள்,5 உலகக் கோப்பைகள்), மூன்றாவது இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத்(34 போட்டிகள், 4 உலகக் கோப்பைகள்). சச்சின் டெண்டுல்கர் இதுவரை 4 உலகக் கோப்பைகளிலும்,33 போட்டிகளிலும் விளையாடி,மியாண்டட்டுடனும் ஸ்டிவ் வாஹ்வுடனும் நாலாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார். 10வது உலகக் கோப்பை போட்டிகள் 2012ல் இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை ஆகிய நாடுகளில் நடக்கவுள்ளன. இதன் இரண்டு அரை இறுதி ஆட்டங்கள் முறையே கொழும்பு மற்றும் கராச்சியிலும், இறுதியாட்டம் மும்பையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விவியன் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பான்டிங், அரவிந்த டி சில்வா மூவரும் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் சதம் அடித்துள்ளனர். மூன்று முறையும் அவர்களது அணிகள் கோப்பையை வென்றன்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த பெருமைக்குரியவர் சச்சின் டெண்டுல்கர்(தல போல வருமா?). இவர் இதுவரை 33 போட்டிகளில் பங்கேற்று 1732 ரன்கள் குவித்துள்ளார்(சராசரி 59.72!). இதில் 4 சதமும், 12 அரை சதங்களும் அடங்கும். இவரின் அதிகபட்ச ரன் 152. இவருக்கு அடுத்து வருபவர் ஜாவெத் மியாண்டட்(33 போட்டிகள் 1083 ரன்கள் 1 சதம் 8 அரை சதம் அதிகபட்ச ரன் 103)


அதிக விக்கெட்டுகள் எடுத்த பெருமைக்குரியவர் வாசிம் அக்ரம். இவர் 38 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த பந்து வீச்சு 5-28,சராசரி 23.80 எகானமி ரேட் 4.04. இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் 33 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நகைச்சுவை

முதலாளியின் பெருந்தன்மை!!

“எல்லோரும் இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நான் தலா 5000 ரூபாய்க்கு காசோலை தர்றேன்.”

“ரொம்ப நன்றி சார்.”

“இட்ஸ்.. ஓகே. இதே போல அடுத்த வருஷமும் வேலை செஞ்சா இந்த காசோலையில நான் கையெழுத்துப் போட்டுத் தர்றேன்!!”


கம்ப்யூட்டர் கடவுள்

“முதன்முதல்ல மல்டி டாஸ்கிங்க் (Multi-tasking) கண்டுபிடிச்சது யாரு?”
“கடவுள்தான்.. “
“எப்படிச் சொல்றே?”
“அவர் கிட்ட தான் நிறைய கைகள் இருக்கே!”


மீண்டும் வடிவேலு, பார்த்திபன்..

“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”

“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”

“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”

“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”

“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”

“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு."



மோட்சம் நிச்சயம்!

“நர்ஸ்.. ஆபரேஷன் முடிஞ்சி நான் கண் முழிச்ச உடனே என் மனைவியைப் பாக்கணும்.”

“கவலைப்படாதீங்க.. கடவுளையே நீங்க பாப்பீங்க!”


விஜய் டிவியில் "மாயாஜாலம்"

Saturday 22 August 2009


Image












விஜய் டிவியில் ஞாயிறு தோறும் மாயலோகம் என்னும்
மாயாஜாலத் தொடர் காலை 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பிரபல மேஜிக் நிபுணரும் மேஜிக்கில் கின்னஸ் சாதனையாளருமான
டாக்டர் அலெக்சாண்டர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
பிரமிக்கவைக்கும் மாஜிக் வித்தைகளில்அசாத்திய சாதனை புரிந்த
இந்தியாவின் பல்வேறு தலைசிறந்த மேஜிக் கலைஞர்களை
விஜய் டி.வி.யின் மாயலோகம் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தி வருகிறது.
மேஜிக்கில் மாயாலாஜங்கள்இந்நிகழ்ச்சியில் தான் முதன் முதலில்
அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் தலை சிறந்த
மேஜிக் கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த
விஜய் டிவி மேடை அமைத்து கொடுத்துள்ளது. அலெக்சாண்டர் கடந்த
15 ஆண்டுகளாக இந்த மேஜிக் கலையில் ஈடுபட்டு பல விருதுகள் பெற்றுள்ளார்.
2005-ம் ஆண்டில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக மாஜிக் செய்ததில்
இவர் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் 12 மணி நேரம் தொடர்ந்து மென்ட்டல் மேஜிக் செய்தற்காகவும்
இவரது பெயர் லிம்காவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மென்ட்டல்
மாஜிக் என்பது, ஒருவரின் மனதில் நினைத்திருப்பதை சரியாக யூகித்துச்
சொல்வதாகும். அலெக்ஸ்சாண்டருக்கு சிறந்த தந்திரக் காட்சி கலைஞருக்கான
`கலைமாமணி' விருதும் வழங்கப்பட்டது.இவர் தமிழ் திரைப்படங்களிலும்
தனது முத்திரையை பதித்துள்ளார். இந்தியாவைத் தவிர பல்வேறு நாடுகளிலும் தனது
மேஜிக் திறமையை நிரூபித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட மாஜிக் ஷோக்களை
இதுவரை இவர் செய்துள்ளார்.மாயலோகம் நிகழ்ச்சியில், மேடையில்
குதிரை, யானை, கார், பைக் ஆகியவை மறைந்து மீண்டும் தோன்றும்
மாயாஜாலம் செய்யவிருக்கிறார். மேலும் ஒரு பெண்ணின் உடலை
இரண்டாகப் பிளந்து மீண்டும் அதனை ஒன்றாக்கும் மாயாஜாலமும் இதில்
இடம் பெறுகிறது. இதைப் போன்ற மேஜிக் காட்சிகள்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது இதுவே முதல் முறை ஆகும்.

அரசியலில் ஆழம் பார்க்கிறேன்: விஜய்



புதுக்கோட்டை மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை அய்யனார் திடலில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

’’ஏன் இந்த இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றக்கூடாது என்று கேட்டனர். நான் பிளஸ்-2 படித்து முடிக்கும் போது நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை என் தந்தையிடம் கூறினேன். அதற்காக பெரிய போராட்டமே நடந்தது.


அதற்கு என் தந்தை என்னிடம் நீ நடிகன் ஆக வேண்டுமானால் அதற்கு உன்னை நீ தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதற்காக நான் 6 மாதம் கடினமாக உழைத்தேன். நாளை தீர்ப்பு என்ற படத்தில் முதலில் நடித்தேன்.

எனது அப்பா லேசான கோடு கிழித்து ஒத்தையடி பாதை காட்டினார். நான் அதை தார் ரோடாக மாற்றினேன். பின்பு அதனை ஹைவே ரோடாக மாற்றினேன். மீண்டும் உழைத்து அதை 6 வழி சாலையாக மாற்றி உழைத்து வருகிறேன்.

எனது பாதை கடினமானது. பல சறுக்கல்கள், கிண்டல்கள் இருந்தன. இதையும் தாண்டி உங்கள் முன் வந்துள்ளேன். நான் எதில் காலை வைத்தாலும் அதில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும், வேகமும் இருக்கும்.

அரசியல் என்பது சினிமா கதை போன்றது அல்ல. சினிமா என்பது ஒரு சிறிய வட்டம். ஆனால் அரசியல் என்பது ஒரு பெரிய கடல். அந்த கடலில் விழுவதற்கு முதலில் ஆழத்தை பார்க்க வேண்டும்.

நான் தற்போது பல தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன். இந்த இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், ஒரு லட்சம் உறுப்பினர்களையும், நகர, வட்டங்கள் சார்பில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும், கிளை மன்றங்களின் சார்பில் 5 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.

இந்த இயக்கம் எப்படி வரும். எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும். அப்போது என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன். அது உங்கள் கையில் தான்

சிங்களப் படத்தில் த்ரிஷா

பிஞ்சு மனசு’ படத்தில் நடித்து வரும் தர்ஷா, ‘சிந்தனை செய்’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு நேரடி சிங்களப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து,

‘இரா அந்த ஏட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் சவுமியன் ஹீரோ. இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பியுள்ள த்ரிஷா, ‘சிங்களப் படம் என்றாலும், தமிழ் பேசும் பெண் வேடம் என்பதால் தப்பித்தேன். எனக்கு சிங்களத்தில் பேச தெரியாது. ஆனால், வசனங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி அர்த்தம் புந்துகொண்டு பேசி நடித்தேன்’ என்றார்.

மூட்டு வலி

பாட்டி வைத்தியம்

- சுரேஷ் குமார்

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:
மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.
முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.
பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:
* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

ரஜினி எனக்கு சூப்பர் ஸ்டார் தான் செளந்தர்யா நெகிழ்ச்சி

Friday 21 August 2009

ரஜினிகாந்த், செளந்தர்யா


ரஜினிகாந்த் எனக்கு சூப்பர் ஸ்டார் தான் கூறுகிறார் ரஜினியின் மகள் செளந்தர்யா.தந்தையப்ப் பற்றி புகழ்வது இப்போது வழக்கமாகிவிட்டது.மேலும் அவர் கூறுகிறார்,தான் இயக்குனராக முடிவு செய்த போது அப்பாவுடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.ஏன் என்றால் நானும் அவரின் ரசிகை.அவர் எனக்கு சூப்பர் ஸ்டார் தான். இதனால் 'சுல்தான் தி வரியா' அனிமேசன் படத்தை இயக்க ஆரம்பித்தேன்.அவருடன் பணியாற்றியது இனிமையான அனுபவம்.சர்வதேச தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் முடியப் போகிறது.உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு உள்ளேன். கமராவுக்கு பின்னல் நின்று பணி புரியவே எனக்கு விருப்பம்.நடிக்கும் அசை எனக்கு இல்லை.சினிமாதான் வாழ்க்கை என்ற பிறகு அப்பாவை வைத்து படம் இயக்க திட்டம் இருக்கிறது.இருவரும் பேசி வருகிறோம்.எதுவும் முடிவாகவில்லை.இப்படியெல்லாம் தந்தையை புகழ்கிறார் செளந்தர்யா.

உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.

Thursday 20 August 2009

http://www.electronicsandyou.com/electronics-history/inventions_and_contribution_of_thomas_alva_edison_to_electronics.html
தோமஸ் அல்வா எடிசன்

  • தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்குச்சென்றது மூன்றே மதங்கள் தான்.
  • தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.
  • அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.
  • மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.
  • மாவீரன் அலெக்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.
  • அல்பேர்ட் ஜஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம்.இதனால் அவரைப் பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினர்.
  • 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஜாஸ்டீன்க்கு ஜனாதிபதியாக பதவியை வழங்க முன்வந்தது.ஆனால் அதனை ஜஸ்டீன் நிராகரித்து விட்டார்.

இதயத்தைக் காக்க......

Wednesday 19 August 2009



நல்ல இரத்தத்தை உடலின் மற்ற உறுப்புக்களுக்கு அனுப்ப உதவுகிறது இதயம்.அந்த இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 5 வழிமுறைகள். புகையிலைப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.புகைப்பிடிக்கக்குடது.உடலில் வியர்வை வெளிப்படுமளவு எதாவது ஒரு வேலை செய்வது நல்லது.அப்போதுதான் உடலில் அதிகப்படியாகப் படியும் கொழுப்புக் கரையும்.வீட்டுப் பராமரிப்பு வேலைகள் செய்வது,தோட்ட வேலைகள் பார்ப்பது,செல்லப் பிராணிகளோடு வாக்கின் போவது கூட சுறுசுறுப்பான வேலைதான்.சத்தான உணவு,கொழுப்புச் சத்தில்லாத உணவுகளை உண்ண வேண்டும்.பழங்கள் பச்சை காய்கறிகள்,பழங்கள் சேர்த்துக் கொள்வது அவசியம்.
உடல் எடையை எந்தளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறீர்களோ,அந்த அளவு இதய நோய்கள் உங்களை விட்டு விலகிச் செல்லும்.அதிக உடல் எடை இதய நோய்கள் மட்டுமல்லாது அதிக இரத்த அழுத்தம்,சக்கரை நோய்,அதிக கொழுப்புப் போன்றவற்றுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும்.எனவே முறையான உடற்பயிற்சி தேவை.குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த அழுத்தம்,சக்கரை அளவு,உடலில் உள்ள கொழுப்பின் அளவு ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.

விண்வெளிக்குச் சென்று வரலாமா?

விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை கொண்டு சென்று திரும்பி பூமிக்கு வரும் வர்த்தகரீதியான விண்கப்பலை தயாரிக்கும் முயர்ச்சித் திட்டம் கடந்த நான்கு வருடங்களாக மொஜோவ வனத்தில் மறைந்திருந்தது,தற்ப்போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கிறது .அதி இரகசியமாக மேற்க்கொள்ளப்பட்ட இத் திட்டத்தின் மூடுதினர் விலகி பொது மக்களுக்கும் விண்வெளி சுற்றுலாப் பயணம் மேற்க்கொள்ளுதல் சத்தியம் எனும நம்பிக்கை பிறந்துள்ளது.இருப்பினும் மெஜோவ வனப்பகுதியில் ருத்தன் பரிசோதனைக் களத்தில் கடந்த வருடம் நடைபெற்ற உயிர்களைக்குடித்த பயங்கர விபத்தில் பின்,விண்வெளிக்குச் சென்று பூமியை சுற்றி வந்து உல்லாசப் பயணிகளை மகிழ்விப்பதர்க்காக
தயாரிக்கப்பட்ட விண்வெளிக்கப்பல் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.திருப்பவும் அவ்வகை விபத்து நிகழாத வண்ணம் சகல கருவிகளும் மறுசீரமைக்கப்பட்டன.விண்வெளிச் சுற்றுலா மிக விரைவில் அதி உச்ச நிலையை அடையும் என எதிர்பாக்கப்படுகிறது .சுமார் 250 விண்வெளி வீரர்களாக
பாவனை செய்ய விரும்பும் நபர்கள்,5 நிமிடங்கள் மட்டும் தமது உடல் நிறையை உணராது அந்தரத்தில் மிதக்கும் அனுபவத்தை உணர்வதற்கு 200,000, டொலர்கள் முற்ப்பணம் செலுத்தி தங்கள் வாய்ப்பிற்கு காத்திருக்கின்றனர்.இருப்பினும்,விண்வெளி சுற்றுலாப் பயணம் மேற்க்கொள்ள மனுக்கொடுத்தவர்கள் எல்லோருக்கும் அந்த வாய்ப்புக்கிடைப்பதில்லை.அவர்கள் மிகக்கடுமையான பரிசோதனைகளில் தேற வேண்டும்.முதலாவதாக நோய்நோடியற்ற திடகாத்திரமானவர்களாக இருக்க வேண்டும்.திவிர மருத்துவப் பரிசோதனைகளில் தேற வேண்டும்.
தொடரும்.

வினோத பழக்கங்கள்

பிரபலமான சிலருக்கு வினோத பழக்கங்கள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.இதோ சில பிரபல வினோதங்கள்.

பிரபல விஞ்ஞானி ஜன்ஸ்டீன் குளிக்கும் போது குளியல் அறைக் கதவை தாழ் இடாமல்தான் குளிப்பார்.

துப்பறியும் தந்தை எனப் புகழப்படுபவர் எட்கார் ஆலன்போ.இவரது செல்லப்பறவை இவரது தோளின் மேல் அமர்ந்தபடி இருந்தால் தான் கதை எழுதும் ஆர்வம் அவருக்கு ஏற்படுமாம்.

நாத்தானியல் ஹாதார்ன் என்ற அமெரிக்க எழுத்தாளர் தன் மனைவியிடம் இருந்து கடிதம் வந்தால் முதலில் கையை நன்கு சுத்தமாக கழுவி விட்டுத்தான் கடிதத்தை பிரிப்பாராம் .

வில்லியம் மேக்விஸ் தாக்கரே எனும் எழுத்தாளர் ' வானிட்டி பேர் ' நாவல் மூலம் அகில உலகப் புகழ் பெற்றார்.இந்த நாவலை எந்த வீட்டிலிருந்து எழுதினாரோ அந்தவீ ட்டைக் கடக்கும் போதெல்லாம் தன் தொப்பியை எடுத்துவிட்டு அந்த வீட்டுக்கு தலை வணங்குவார்.

முதன் முதலில் ஆங்கில அகராதியைத் தயாரித்த டாக்டர் சாமுவேல் ஜோன்சானுக்கு பார்வையாளர்கள் தொல்லைப் படுத்துவார்கள் என்ற பயம் எப்போதும் உண்டு.அதனால் அவர் எழுதும்போது மரத்தின் மேல் உட்கார்ந்து கொள்வாராம்.

நெப்போலியனை வெண்று உலகப் புகழ் பெற்ற வேசிண்டன் பிரபு நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் தீவிரமானவர்.அதனால் எப்போதும் தனது சட்டைப் பையில் ஆறு கடிகாரங்களை வைத்திருப்பாராம்.